ஹாய் சிவராம்
நான் உங்களுக்கு அனுப்பும் ஜோதிட பாடங்களை நீங்கள் பார்க்கிறீர்களா ? உங்களிடம் இருந்து எந்த ஒரு தகவலும் இல்லை
எனக்கு தெரியப்படுத்தவும் . உங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன் .
Tamil Nadu, India.
நான் உங்களுக்கு அனுப்பும் ஜோதிட பாடங்களை நீங்கள் பார்க்கிறீர்களா ? உங்களிடம் இருந்து எந்த ஒரு தகவலும் இல்லை
எனக்கு தெரியப்படுத்தவும் . உங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன் .
செவ்வாய் ( எண் 9 )
ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஆங்கில தேதிகள் 9 18 27 ம் தேதிகளில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்க தேதியில் பிறந்தவர்கள் . இவர்கள் செவ்வாய் கிரகத்தின் குணத்தை பெற்றிருப்பார்கள்
செவ்வாய் கிரக மந்திரம்
தரணி கர்ப்ப ஸம்பூதம் வித்யுத் சம ப்ரபம்
குமாரம் சக்திகஹஸ்தம்ச மங்களம் ப்ரணமாயஹம்
இதன் பொருள்
பூமி தேவியின் கர்ப்பத்தில் உதித்தவர் மின்னலை போன்ற ஒளியை உடையவர் . சக்தி ஆயுதம் தரித்தவர் . மங்களன் என்னும் பெயரை உடைய செவ்வாயை வணங்குகிறேன்
சாகசம் தந்திரம் சூழ்ச்சி அனைத்தையும் அறிந்தவர்கள் . சமாதானங்களில் நம்பிக்கை இல்லாதவர் . தன்னை யாரும் தடுத்த நிறுத்த கூடாது என்ற எண்ணம் உடையவர் . எதிரியின் பலத்தை கணிப்பவர் . ராஜ தந்திரி . பதுங்கி பாயும் குணத்தை உடையவர் . கோபம் நிறைந்தவர் .
முதல் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்ற ராணுவ தளபதிகள் காவல் அதிகாரிகள் நீதிபதிகள் பொறியியல் வல்லுநர்கள் நிலஜமீன்தார்கள் ஆகியோர்கள் 9 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களே .
மாவீரம் படைத்த புரட்சியாளர்கள் ஒன்பதாம் எண்ணின் பலம் ஓங்கி இருப்பதால் உருவாகிறார்கள்
செந்நிறம் கொண்டவன் அழகன் கடும் கோபத்தை உடையவன் தற்பெருமை பிரியன் பொறுமையற்றவன் வேட்டை பிரியன் என்றெல்லாம் இவர்களை கூறலாம்
ஓயாத போராட்ட வாழ்க்கையும் பல்வேறு ஆபத்துகளில் அகப்படுத்தலும் இவர்களுக்கு உண்டாகும்
நல்ல செயல்களில் ஈடுபடும்பொழுதெல்லாம் புகழும் பெருமையும் மேலோங்கும்
வஞ்சக மனிதர்கள் ஏமாற்றுக்காரர்கள் விசுவாசம் இல்லாதவர்கள் இவர்கள் வாழக்கையில் அடிக்கடி குறிக்கிடுவார்கள்
செவ்வாயின் ஆதிக்க பலம் குறைந்த 9 ம் எண்ணினர் தீராத காம வெறியும் போதை பொருள்களில் ஈடுபாடும் மிருக சுபாவமும் சண்டை குணம் கொண்டவர்களாகவும் காணப்படுவார்கள் .
இவர்களின் வாழ்க்கையில் 9 18 27 36 45 54 வயதுகளில் விபத்து கண்டம் ரத்தம் வெளிப்படும் சம்பவங்கள் ஏற்படும்
வாஸ்து நிபுணர்கள் கட்டட காண்ட்ராக்டர்கள் பொறியியல் துறையினர் இரும்பு இருக்கு உற்பத்தி அரசியல் பதவி விளையாட்டு வீரர் . போன்ற துறைகள் மற்ற எண்களை அனுசரித்து இவர்களுக்கு ஜீவனங்கள் உண்டாகிறது
5 14 23 6 15 24 3 12 21 30 9 18 27 ஆகிய கூட்டு எண் 3 5 6 9 வரும் நாட்களும் தேதி ஹீப்ருவின் 9 ம் எண் நாட்களும் இவர்களுக்கு அதிர்ஷ்டம் தரும்
DATE OF HEEPRU 19 28 37 46 மற்றும் 27 க வரும் நாட்கள் இவர்களுக்கு மிகுந்த அதிர்ஷ்டம் தரும்
2 11 29 20 மற்றும் 2 க வரும் நாட்கள் இவர்களுக்கு மிகவும் ஆபத்தானது . இந்த தேதிகளில் இந்த எண்களில் எந்த ஒரு முக்கிய வேலைகளிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது
வெள்ளை நிற ஆடைகள் இவர்களுக்கு தீமையான பலனை கொடுக்கும் .
ஒவ்வொரு தேதியில் பிறந்த அனைவருக்கும் சொல்லப்பட்ட பலன்கள் அனைத்தும் பொருந்தும் . எண்கணித ஜோதிடம் பார்க்க வருபவர்களிடம் பிறந்த தேதியை வைத்து மேலே சொன்ன அனைத்து கிரகங்களுக்கான பலன்களை சொல்லும் பொழுது அது அவர்களுக்கு மிக சரியாக பொருந்தும் . சோதித்து பாருங்கள்
தொடரும்
ஹாய் சிவராம்
ஒருவருக்கு பெயர் திருத்தம் செய்து கொடுக்கும்பொழுது அவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்களுக்கும் அந்த எண்களுக்கு உரிய கிரகத்துக்கும் குரு கிரகத்தின் பார்வை இருந்தால் அந்த நபருக்கு நாம் செய்து கொடுக்கும் பெயர் திருத்தம் மிகவும் பிரமாண்டமான பலனை கொடுக்கும் . இந்திய ஜோதிடத்தில் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழியும் உண்டு .
ஒவ்வொரு கிரகத்துக்கும் உள்ள பார்வைகளை இப்பொழுது பார்க்கலாம்
பொதுவாக ஒவ்வொரு கிரகமும் தான் இருக்கும் இடத்திலிருந்து 7 வது இடத்தை பார்க்கும் . உதாரணத்துக்கு ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் ரிஷப ராசியில் இருந்தால் அந்த ரிஷப ராசியில் இருந்து எண்ணி வர விருச்சிக ராசி 7 ம் இடமாக வருகிறது . ஆக சூரியனின் பார்வை விருச்சிக ராசிக்கு இருக்கிறது .
இதே போல் சூரியன் முதல் கொண்டு 9 கிரகங்களும் தான் இருக்கும் இடத்திலிருந்து 7 வது வீட்டை பார்க்கும் அதாவது 7 வது ராசியை பார்க்கும்
இதில்
இதில் குரு செவ்வாய் சனி கிரகங்கள் மட்டும் தான் இருக்கும் இடத்திலிருந்து 7 ம் வீட்டை பார்ப்பதோடு மட்டுமல்லாமல்
குரு 5 9 ம் வீட்டையும்
செவ்வாய் 4 8 வீட்டையும்
சனி 3 10 வீட்டையும் பார்ப்பார்கள் .
ஒருவருக்கு பெயர் திருத்தம் செய்து கொடுக்கும்பொழுது அந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்களுக்கும் அந்த பிரமிடு எண்களுக்கு உரிய கிரகத்துக்கும் குருவின் பார்வை இருந்தால் அது மிகவும் சிறப்பான பலனை தரும்
உதாரணத்துக்கு ஒருவருக்கு பிறந்த தேதியின் அடிப்படையில் 5 ம் ஆதிக்கத்தில் பெயர் அமைக்கவேண்டும் .
5 ம் எண்ணுக்குரிய புதன் தனுசு ராசியில் இருக்கிறார் . அவருடைய ஜாதகத்தில் குரு மிதுன ராசியில் இருக்கிறார் .
குரு இருக்கும் மிதுன ராசியில் இருந்து தனுசு ராசி வரை எண்ணி வர 7 ம் இடமாகிறது . குரு 7 ம் பார்வையாக தனுசு ராசியில் இருக்கும் புதனை பார்ப்பதால் அந்த நபருக்கு புதனின் ஆதிக்கத்தில் பெயரை அமைப்பது நல்ல பலனை தரும் .
மற்றுமொரு உதாரணம் ஒருவருக்கு பிறந்த தேதியின் அடிப்படையில் 1 ம் எண் ஆதிக்கத்தில் அதாவது சூரியனின் ஆதிக்கத்தில் பெயரை அமைக்கவேண்டும் .
அவருடைய பிறந்த ஜாதகத்தில் குரு தனுசு ராசியில் இருக்கிறார் . அந்த நபருக்கு சூரியனின் ஆதிக்க எண்ணான 37 ம் எண்ணில் பெயரை அமைப்பது சிறப்பான பலனை தரும் . காரணம் இந்த 37 ம் எண் சிம்ம ராசியில் வரக்கூடிய சூரியனின் ஆட்சி எண்ணாகும் .
குரு இருக்கும் தனுசு ராசியில் இருந்து எண்ணிவர சிம்ம ராசி 9 ம் இடமாகும் . குருவின் பார்வை 9 பார்வையாக சிம்ம ராசியில் இருக்கும் 37 ம் எண்ணுக்கு விழுகிறது . இந்த எண்ணுக்கு குரு பார்வை இருப்பதால் இது சிறப்பான பலனை தரும் .
அதாவது எல்லா கிரகங்களும் பொதுவாக தான் இருக்கும் இடத்திலிருந்து 7 வது வீட்டை பார்க்கும் .
இதில் குரு சனி செவ்வாய் இந்த மூன்று கிரகங்களும் 7 பார்வையோடு மட்டுமல்லாமல் வேறு சில பார்வைகளோடு மற்ற வீடுகளை அதாவது மற்ற ராசிகளை பார்க்கும் . இதில் குரு பார்வை விசேஷ பலனாகும் .
நாளை மற்ற கிரகங்களுக்கு உள்ள பார்வையால் ஒரு நபருக்கு எண்கணித அடிப்படையில் பெயர் திருத்தம்பலன்களை உண்டாக்குமா ?
தொடரும் .
.ஜோதிடர் இராவணன் .
மேலும் அறிவியல் ரீதியாக பார்த்தால் செவ்வாய் சூரியனில் இருந்து சுமார் 22 கோடி கிலோமீட்டர் தொலைவிலும், சனி சுமார் 140 கோடி கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. மேலும் சனி முழுக்க முழுக்க வாயுக்களால் ஆன கிரகம் ஆனால் செவ்வாய் முழுக்க முழுக்க கடும் பாறைகளால் ஆன முரட்டு கிரகம்.
ஜோதிடத்தில் சனி முழு பாவர் என்றும் செவ்வாய் முக்கால் பாவர் என்றும் அழைக்க படுகிறது. மேலும் இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றுக்கு ஒன்று விரோதி என்பதாலும், பாவ கிரகங்கள் தான் இருக்கும் வீட்டை கெடுக்கும் என்பதாலும் சுப அமைப்பில் இல்லாத சனி மற்றும் செவ்வாயின் இணைவு அதிக கெடுபலன்களை ஜாதகருக்கு அதன் திசா புத்தியில் நிச்சயம் தரும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
இருப்பினும் இந்த இரண்டு கிரகங்களும் லக்கினத்திற்கு 6 இல் இணைந்தால் ஜாதகர் நோய், கடன் மற்றும் பகை இல்லாமல் இருப்பார். எனவே இவை இரண்டும் 6 ஆம் வீட்டில் இணைவது நன்மை. இருப்பினும் 6 ஆம் இடம் ஒரு மனிதருக்கு அவரின் உத்தியோகத்தை (அடிமை தொழில்) குறிக்கும் அதனால் வேலை விஷயங்களில் அதிக சிரமங்களை அளிக்கும்.
எனவே சுபர் பார்வை மற்றும் சுபர் சேர்க்கை இல்லாத சனி, செவ்வாய் சேர்க்கை எந்த நிலையிலும் ஒரு ஜாதகருக்கு நன்மை அளிக்காது.
![]() |
மருத்துவரிடம் உடலை காண்பிப்பது போல ஜோதிடரிடம் ஜாதகத்தைக் காண்பித்து அதற்கு ஏற்றவாறு தனது வாழ்க்கை முறையையும், உணவு முறையையும் நெறிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
கிரகங்களில் சூரியன் தான் இதய நோய்கள், கண் நோய்கள், முதுகு வலி, முதுகெலும்பு தண்டு வடத்தில் பிரச்னைகள், ரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் ஏற்பட காரணமாகிறது.
ஜோதிட ரீதியா பார்க்கும் போது சூரியன் ராஜ கிரகம். இதயம் ராஜ உறுப்பு. ஜாதகத்துல சூரியன் கெட்டால் இதய முடக்கம், மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.
ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் 4 ல் இருந்து சனி மற்றும் செவ்வாயால் பார்க்கப் பெற்றால் இதய நோய் வரும்.
இதயத்தின் இயக்கத்தை சூரியன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஜாதகத்தில் எட்டாம் பாவாதிபதியாக சூரியன் அமைந்து, அந்த சூரியனோடு தீய கிரஹங்களின் இணைவு ஏற்பட்டு, லக்னமும், லக்னாதிபதியும் பலமிழந்து இருந்தால் அவருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.
இருதய கோளாறுகளுக்கு சூரியனும், சந்திரனும் பொறுப்பாகின்றனர். ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருந்தால் அவருக்கு இருதயக் கோளாறு ஏற்படாது. மாறாக, சந்திரனுக்கு பாவ கிரகங்களின் சேர்க்கை, கிரக யுத்தம் காணப்பட்டால் இருதயக் கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. ஒருவரின் ஜாதகக் கட்டத்தில் மனோகாரகரான சந்திரன் பலவீனமடைந்திருந்தால் அவருக்கு ரத்த அழுத்த பிரச்சினை ஏற்படும்.
ஜோதிடத்தில் ரத்தத்திற்கு உரிய கிரகமாக செவ்வாய் கருதப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் உடன் குரு சேர்க்கை பார்வை இருந்தால் உயர் ரத்த அழுத்தம், இருதயக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அஜீரணம்,வாயு கோளாறுகள், இதய படபடப்பு இருந்தால் உங்க ஜாதக கட்டத்தில் குரு நீசம், மறைவு பெற்று பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று அறிந்து கொள்ளலாம்.
இதயத்துக்கு தேவை குரு பலம். குரு கெட்டாலும் இதய பிரச்சினை வரும். ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனுக்கு 6,8,12 போன்ற இடங்களில் குரு இருந்தால் அதனை சகட யோகம் எனக் கூறுவர். அதுபோன்ற அமைப்பு உள்ளவர்களுக்கு இருதயக் கோளாறு, கொழுப்பு அதிகரிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.
தினசரியும் சூரிய வழிபாடு செய்யும் போது ஆதித்ய ஹிருதயம் மந்திரத்தை சொல்லலாம். செவ்வாய்கிழமை முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும். ஜாதகத்தில் சூரியன், குரு பாதிக்கப்பட்டவர்கள் தினசரியும் மன அமைதிக்காக தியானம் செய்ய வேண்டும். தியானம் செய்யும் போது முருகன் வேல், தாமிரத்தில் டாலர் செய்து கழுத்தில் அணிய இதய நோய் பாதிப்புகளை தவிர்க்கலாம்.
வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு ஜோதிட பலன்கள் - ஜோதிடம் சம்பந்தமான கேள்விகளுக்கு மெயிலில் பதில் அனுப்பி வைக்கப்படும்
![]() |
இளங்கோவன் பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் :
![]() |
இன்று 13 - 1 - 2026 - செவ்வாய்க்கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 37.
இந்த எண்ணுக்குரிய கிரகம் சூரியன்
இதன் மூலம் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் .
3 7 ஹீப்ரு பிரமிடு எண்
9 3 4
6 3 9 5
8 7 5 4 1
4 4 3 2 2 8
1 3 1 2 0 2 6 பிறந்த தேதி
![]() |