செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் :
9 - 18 - 27 - போன்ற தேதியில் பிறந்தவர்கள் செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் .
செவ்வாய் கிரகத்தை பூமிகாரகன் என்று கூறுவார்கள் . அதாவது இந்த பூமியை ஆட்சி செய்பவர் . இவர்கள் பார்வை எப்பொழுதும் கீழ் நோக்கியே இருக்கும் . பூமியில் கிடக்கும் பொருள்கள் இவர்கள் பார்வைக்கு தப்பாது .
எதிலும் முன் கோபம் அதிகமாக இருக்கும் . எதிலும் தன்னை யாரும் தடுத்து நிறுத்த கூடாது என்ற எண்ணம் உடையவர் . சமாதானத்தில் நம்பிக்கை இல்லாதவர் . எதிரியின் பலத்தை கணிப்பவர் . ராஜதந்திரி பதுங்கி பாயும் புலி கோபம் நிறைந்தவர்கள் என்று இவர்களை சொல்லலாம் .
மாவீரம் படைத்த புரட்சியாளர்கள் இந்த ஒன்பதாம் எண்ணில் பலம் ஓங்கி இருந்தால் உருவாகிறார்கள் .
ஓயாத போராட்ட வாழ்க்கையும் பல்வேறு ஆபத்தான சூழ்நிலைகளையும் இவர்கள் சந்திப்பார்கள் . வஞ்சக மனிதர்கள் ஏமாற்றுக்காரர்கள் விசுவாசம் இல்லாதவர்கள் இவர்களின் வாழ்க்கையில் குறிக்கிடுகிறார்கள் .
பொதுவாக இவர்களுக்கு 9 18 27 36 45 54 வயதுகளில் விபத்து கண்டம் ரத்தம் வெளிப்படும் சம்பவங்கள் நிகழ்கின்றன .
இவர்கள் உடம்பில் மாறாத தழும்பு இருக்கும் .
வாஸ்து நிபுணர்கள் கட்டிட கான்டராக்டர்கள் பொறியியல் துறை இரும்பு உருக்கு உற்பத்தி அரசியல் பதவி விளையாட்டு வீரர் காவல் துறை ராணுவம் போன்ற துறைகளில் இவர்களுக்கு ஜீவனம் அமையும் .
இவர்களுக்கு 9 3 5 6 போன்ற எண்களில் பெயரை அமைப்பது நன்மையை தரும் . செவ்வாயின் ஆதிக்க எண்ணான 18 ம் எண்ணை தவிர்ப்பது நல்லது . மிகவும் மோசமான ஆபத்தான பலனை தரக்கூடியது இந்த எண் .
இவர்களுக்கு 2 ம் எண்ணில் பெயரை அமைப்பது உயிராபத்தை தரும் .
2 11 20 29 போன்ற தேதிகளும் கூட்டு எண் 2 க வரும் நாட்களும் இவர்களுக்கு ஆபத்தானது .
B K R - போன்ற ஆரம்ப எழுத்துக்களும் இவர்களுக்கு நன்மையை தராது .
இவர்களுக்கு மஞ்சள் சிகப்பு போன்ற நிறங்கள் நன்மையை தரும் .
தெற்கு திசை இவர்களுக்கு நன்மையை தரும் .
வெள்ளை நிறம் இவர்களுக்கு ஆபத்தை தரும் .
செவ்வாய் கிரகத்திற்கு உரிய கடவுள் முருகன் .
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
0 comments:
Post a Comment