Home » » மருந்து கடைகளுக்கு (MEDICAL SHOP ) கண் திருஷ்டி ஏற்பட்டால் செய்ய வேண்டிய பரிகாரம் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

மருந்து கடைகளுக்கு (MEDICAL SHOP ) கண் திருஷ்டி ஏற்பட்டால் செய்ய வேண்டிய பரிகாரம் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                                தாயே பூமாதேவி
பரிகார முறைகளை படிக்கும் வாசகர்களுக்கு பரிகாரம் செய்ய நினைப்பவர்கள் பரிகார முறைகளை நன்கு செய்ய தெரிந்த வேதங்கள் தெரிந்தவர்களை  கொண்டு செய்தால் பலன் நிச்சயம் உண்டு .  பரிகாரம் செய்யும்பொழுது தவறு நேர்ந்து விட்டால் நஷ்டத்திற்கு ஆளாக வேண்டிவரும் . நீங்கள் விருப்பப்பட்டால் பரிகாரங்களை சக்தி ஹீப்ரு ஆராய்ச்சி நிலையத்தின் மூலமாக செய்து தருகிறோம் .

ஆங்கில மருந்துகள் விற்பனை செய்யப்படும் கடைகளாக இருந்தாலும் சரி ஆயுர்வேத சித்த ஓமியோபதி மருந்துகள் விற்பனை செய்யப்படும் கடைகளாக இருந்தாலும் சரி நாட்டு மருந்துகள் விற்பனை செய்யப்படும் கடைகளாக இருந்தாலும் சரி இவை எல்லாவற்றிற்கும் ஏற்படும் கண்திருஷ்டிகளுக்கான பரிகார முறை ஒன்றுதான் . 


செவ்வாய் கிழமை இரவு கடையை நன்கு சுத்தம்  செய்து சாம்பிராணி புகை போடவேண்டும் . கடையின் நடுவே ஓரிடத்தில் சாக்பீஸினால் ஒரு சதுரம் போடவேண்டும் . சதுரத்தின் உள்ளே நீளவாக்கில் 5 கோடுகளும் குறுக்காக 5 கோடுகளும் போடவேண்டும் . இப்பொழுது சதுரத்தின் உள்ளே முப்பத்தி ஆறு கட்டங்கள் இருக்கும் . அக்கட்டங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு எழுத்தாக கீழ்கண்ட முறைப்படி எழுத்துக்களை எழுத வேண்டும் . 

ச ர ஹ ண ப வ 
ர ஹ ண ப வ ச  
ஹ ண ப வ ச ர 
ண ப வ ச ர ஹ 
ப வ ச ர ஹ ண 
வ ச ர ஹ ண ப 

இதேபோல் 6X 6 அங்குலம் அளவுள்ள செப்பு தகட்டில் எழுதவேண்டும் . ஒரு கலசத்தில் கிணற்று நீரை ஊற்றி அதன் மீது தேங்காய் வைத்து சுற்றிலும் மாவிலைகளை சொருகி வைக்கவேண்டும் . 

தரையில் வரைந்த இயந்திரத்தின் மீது கலசத்தை வைத்து அதன் அருகே விளக்கு வைத்து ஐந்து முகங்களிலும் திரிபோட்டு நெய் ஊற்றி ஏற்ற வேண்டும் . இயந்திர தகட்டை கலசத்தின் முன்னே வைக்கவேண்டும் , கலசத்திற்கும் விளக்கிற்கும் செண்பக மலர் சரங்களை சூட்டவேண்டும் . 

துவரை பயிரை சுண்டல் செய்து நிவேதனமாக வைக்கவேண்டும் . தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு கற்கண்டு கற்பூரம் ஆகியவற்றை வைத்து கொள்ளவேண்டும் . 

கலசத்திற்கு செண்பக மலர்களால் அர்ச்சனை செய்தபடி கீழ்கண்ட சுலோகத்தை 108 முறை கூறவேண்டும் .

" தரணீ கர்ப்ப சம்பூதம் 
வித்யுத் காந்தி சமப்ரபம் 
குமாரம் சக்தி ஹஸ்தம்ஸ 
மங்களம் ப்ரண மாம்யஹம் 

இதை கூறி முடித்து விட்டு கீழ்கண்ட சுலோகத்தை ஒன்பது தடவை கூறி செண்ப மலர்களால் இயந்திர தகட்டிற்கு அர்ச்சனை செய்யவேண்டும் .

" ஓம் ஐயும் , கிலியும் சௌவ்வும் 
நீயும் ஸ்ரீயும் ஹரியும் சரவண 
பம வசி வசி வா வா சுவாஹ 

என கூறி சாம்பிராணி புகை போட்டு கற்பூரம் தீபம் காட்டி வணங்க வேண்டும் . 


கடை முழுவதும் சாம்பிராணி புகை போட்டு கலசத்தில் உள்ள நீரை தெளிக்க வேண்டும் . தேங்காய் மீது கற்பூரம் வைத்து  கடையை மூன்று முறை சுற்றி கடை வாசலில் கடையை நோக்கி நின்று கொண்டு இடப்பக்கமாக மூன்று முறையும் வலப்பக்கமாக மூன்று முறையும் சுற்றி சிதறு காயாக அடிக்கவேண்டும் . 

பூஜை செய்த இயந்திர தகட்டை வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகன் படத்திற்குள் வைத்து எல்லோருடைய பார்வையிலும் படும்படி மாட்டி வைக்கவேண்டும் . இப்படத்திற்கு செவ்வாய் கிழமை தோறும் பூஜை செய்து வணங்கி வரவேண்டும் . மேலும் நாள்தோறும் விளக்கேற்றி ஊதுபத்தி ஏற்றவேண்டும் . இப்படி செய்வதால் ஏற்கனவே இருந்த கண்திருஷ்டிகள் நீங்கும் . இனிமேற்பட்டு கண்திருஷ்டிகள் ஏற்படாமல் தடுத்து கடையின் வியாபாரம் அமோகமாக இருக்கும் .





உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


 



Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment